உங்க டீயில் நிறம், மணத்தோட கொஞ்சம் விஷமும் இருக்கு.. எஸ், பாஸ்!
டெல்லி: இந்தியாவில் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் தேயிலையில் அதிக அளவில் பூச்சி மருந்துகள் கலப்படம் உள்ளதாக கிரீன் பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
நம்மவர்களில் பலருக்கு விடியல் என்பதே டீ கப் முகத்தில் தான். டீயைக் குடித்து புத்துணர்ச்சியாக நாளைத் துவக்குகிறோம் என நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், காலையிலேயே நமது எதிர்காலக் கருமாதிக்கு நாள் குறித்து விட்டுத்தான் வேலைகளை ஆரம்பிக்கிறோம் போல.. காரணம், அந்த டீயில் பூச்சி மருந்துகள் கலப்படமாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆய்வு...
கடந்தாண்டு மே மாதம் முதல் இந்தாண்டு ஜூன் மாதத்திற்கு இடைப்பட்டக் காலத்தில் சந்தையில் விற்பனைக்கு வந்த தேயிலை மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பூச்சி மருந்து கலப்படம்...
அதன்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு தேயிலை நிறுவனங்களின் 49 வகை டீ பாக்கெட்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவைகளில் 34 பாக்கெட்டுக்களில் இருந்த டீத்தூளில் பூச்சி மருந்துகளின் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டது.

அறிக்கை...
இவ்வாறு பூச்சி மருந்து கலப்படம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிக்கைகளை சம்பந்தப்பட்ட தேயிலை நிறுவனங்களுக்கு கிரீன்பீஸ் அமைப்பு அனுப்பியுள்ளதாம்.

ஏற்றுமதி...
கலப்படம் செய்யப்பட்ட இந்தக் குறிப்பிட்ட பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் தேயிலைகள் இந்தியாவில் மட்டுமின்றி ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மறுப்பு...
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இந்திய தேயிலை வாரியம் மறுத்துள்ளது. இந்தியத் தேயிலைகள் தரமானவை என்பதில் சந்தேகமே இல்லை என அது தெரிவித்துள்ளது.

இவை தான் அவை....
சோதனைக்குட்படுத்தப்பட்ட டீத்தூள் நிறுவனங்கள் இவைதான்- ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா குளோபல் பீவரேஜஸ், வாக் பக்ரி, குட்ரிக் டீ, டிவின்னிங்ஸ், கோல்டன் டிப்ஸ், கோ சா, கிர்னார்.
பேசாம இனிமேல் டீயை விட்டு காபிக்கு மாறிடலாமா.. ஒரு வேளை அதில் கரப்பான் பூச்சியை மிக்ஸ் பண்ணிக் கொடுத்திட்டா... வம்பே வேணாம். கம்பங் கூழ்தான் பெஸ்ட்!
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications