கர்நாடகாவில் 50 வயது பெண்மணியை வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டும் இளைஞன்.. வைரலான சிசிடிவி காட்சி
பெங்களூர்: 50 வயது பெண்மணி ஒருவரை 25 வயது இளைஞர் பெரும் வீச்சரிவாள் கொண்டு வெட்டி கொல்ல முயலும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம், கோலார் அடுத்த கம்மசந்திரா பகுதியிலுள்ள கோடிலிங்கேஷ்வரா கோயிலில் பணியாற்றி வருபவர் குமாரி (50). இவரை சந்தோஷ் என்ற 25 வயது வாலிபர் விரட்டி விரட்டி வீச்சரிவாளால் வெட்டும் காட்சி அங்குள்ள சிசிடிவி காமிரா ஒன்றில் பதிவாகி வைரலாக சுற்றி வருகிறது.
Man hacks woman in Kolar temple, video circulates on social media https://t.co/xa9aiG3A43 pic.twitter.com/Y6gMtmhz7z
— TheNewsMinute (@thenewsminute) October 17, 2016
இருப்பினும் அக்கம்பக்கத்து தைரியமான ஆண்கள் சேர்ந்து, கொலை முயற்சி செய்த சந்தோஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், குமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்.
மேல் சிகிச்சைக்காக பெங்களூர் மல்லையா மருத்துவமனையில் குமாரி சேர்க்கப்பட்டுள்ளார்.