Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீ ஏன் தாமதம் எனக் கேட்டவர் கழுத்தறுத்துக் கொலை – மற்றொருவர் படுகாயம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் டீ கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதில், வாடிக்கையாளரின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜப்ராபாத் என்ற பகுதியில் சகோதரர்கள் இரண்டு பேர், பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் அடிக்கடி டீக்குடிப்பது வழக்கம்.

டீ கேட்ட சகோதரர்கள்:

நேற்று மாலை 5 மணி அளவில் டீ வேண்டுமென்று டீக்கடைக்காரரிடம் கூறி அனுப்பிவைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

தாமதித்த கடைக்காரர்:

ஆனால் அவர் டீ கொடுக்கமால் மிகவும் தாமதித்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களுக்கு இன்னும் ஏன் டீ வரவில்லை என்று தெரியாமல் காத்திருந்துள்ளனர்.

கேட்ட சகோதரர்கள்:

இதனிடையே சகோதரர்களில் ஒருவரான வாசிம் என்பவர் டீக்கடைக்கு மீண்டும் சென்று, அதன் உரிமையாளர் ஹபீப் எதற்காக டீ கொடுத்த அனுப்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

கைகலப்பாக மாறிய சண்டை:

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பாக மாறியது.

உயிரிழந்த வாசிம்:

அப்போது டீக்கடைக்காரின் உறவினர் ஒருவர் வாசிமின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

சகோதரரும் காயம்:

இதை தடுக்க வந்த வாசிமின் சகோதரரையும் அவர் கத்தியால் கொடூரமாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை:

இச்சம்பவம் தொடர்பாக டீக்கடை உரிமையாளர் ஹபீப் மற்றும் உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+