"செம ட்விஸ்ட்".. 24 வயசுதான்.. ஒன்னுல்ல.. ரெண்டு பொண்ணு.. அதுவும் ஒரே நேரத்தில்.. கலக்கிய இளைஞர்
2 காதலிகளை ஒரே நேரத்தில் கல்யாணம் செய்துள்ளார் இளைஞர் ஒருவர்
ராய்கட்: ஒரு பொண்ணை லவ் பண்ணி காதலித்து கல்யாணம் செய்யவே, சிலருக்கு நாக்கு வெளியே தள்ளிடுது.. இதுல 2 பொண்ணாம்.. அதுவும் ஒரே மேடையில் செம ட்விஸ்ட்டாக நடந்துள்ளது கல்யாணம்.. இதை பார்த்து காதில் புகைச்சலுடன் நெட்டிசன்கள் திருமண வாழ்த்து சொல்லி வருகிறார்கள்!
இந்த தகவலை ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.. சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதி பஸ்தார் மாவட்டம்.. இங்கு வசித்து வருபவர் சந்த் மவுரியா... இவருக்கு 24 வயதாகிறது

இவர் ஒரு விவசாயி.. பார்ட் டைம் வேலையாக கூலி தொழிலும் செய்து வருகிறார். அதாவது கரண்ட் கம்பங்களை நடுவதுதான் இவரது பார்ட் டைம் ஜாப்.
ஒருமுறை அப்படித்தான் தோகபால் என்ற பகுதிக்கு கரண்ட் கம்பம் நடும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.. அப்போதுதான் சுந்தரியை பார்த்தார்.. "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" என்று பார்த்த மாத்திரத்திலேயே லவ் வந்துவிட்டது.. சுந்தரிக்கு 21 வயசாகிறதாம்.. இருவரும் தீவிரமாக காதலித்தனர்.. வீட்டில் சொல்லி பெற்றோர் விருப்பத்துடன் கல்யாணம் செய்யவும் ஐடியா செய்தனர்.
ஆனால் பாருங்க, அதற்குள் ஹசீனா என்பவர் மவுரியா வாழக்கையில் நுழைந்துவிட்டார்.. எங்கோ ஒரு ரிசப்ஷனுக்கு போனாராம் மவுரியா.. அங்கேதான் ஹசீனாவை பார்த்திருக்கிறார்.. பார்த்ததும் லவ் வந்துவிட்டது.. ஹசீனாவிடம் தன் காதலை சொன்னபோது, கூடவே தன்னுடைய சுந்தரியுடனான காதலையும் சேர்த்து சொல்லிவிட்டார். இது தெரிந்ததும் ஹசீனா, ஆத்திரமடைவார் என்று பார்த்தால், சட்டென ஓகே சொல்லிவிட்டாராம்.. இது மவுரியாவுக்கே கொஞ்சம் ஷாக்தான்.
இதன்பிறகு சுந்தரியிடம் விஷயத்தை சொல்ல, அவர் அதற்கு மேல் டக்கென ஓகே சொன்னாராம்.. அப்பறம் என்ன, 3 பேரும் கல்யாணம் செய்ய முடிவெடுத்தனர். வீட்டு பெற்றோர்களும் ஓகே சொன்னார்கள்.. ஆனால் அங்கேதான் ஒரு ட்விஸ்ட்.. கல்யாணம் நடப்பதற்கு முன்பேயே 3 பேரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.. இதைவிட ஆச்சரியம், அதே வீட்டில் மவுர்யாவின் அப்பா, அம்மா, 2 சகோதரர்களும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கு பிறகு, ஒருவழியாக ஊர் அறிய கல்யாணம் செய்ய முடிவெடுத்து, அதன்படி கிராமத்தையே அழைத்து சம்பிரதாய முறைப்படி கல்யாணம் நடந்தது. சுந்தரியின் வீட்டில்தான் கொஞ்சம் எதிர்ப்பு போல தெரிகிறது.. அவர்கள் மட்டும் இந்த கல்யாணத்திற்கு வரவில்லை... எனினும் இதை பற்றி சுந்தரி சொல்லும்போது, எப்படியும் என் அப்பா, அம்மா என்னை தேடி வருவார்கள்.. ஒருநாளை என்னை மன்னித்து ஏற்று கொள்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது என்கிறார்.
இப்போது மவுரியா 2 மனைவிகளுடன் படுசவுக்கியமாக இருக்கிறாராம்.. 2 புது பொண்டாட்டிகளும் மவுரியாவை நன்றாக கவனித்து கொள்கிறார்களாம்.. 2 மனைவிகளுக்குள்ளும் எந்த சண்டை சச்சரவும் இல்லையாம்.. "2 பேருமே தன்னை அளவுக்கு அதிகமாக நேசித்ததால்தான், அவர்களை கல்யாணம் செய்ய துணிந்தேன்.. யாரை ரொம்ப பிடிக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது.. இருவருமே எனக்கு உயிர்தான்" என்கிறார் இந்த புதுமாப்பிள்ளை.
இவர்களின் கல்யாண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியும் வருகின்றன.. அதை பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சியும், வயிற்றெரிச்சலுமாக வாழ்த்து சொல்லி வருகின்றனர்!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications