புத்தாண்டு கொண்டாட்டத்தில் தகராறு.. நண்பர்களால் குத்தி கொல்லப்பட்ட ரிலையன்ஸ் ஊழியர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரிலையன்ஸ் நிறுவன ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
சிக்கமகளூர் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (27). பெங்களூர் ஜேபிநகர் மெயின்ரோடு, 2வது ஸ்டேஜ் பகுதியில் நண்பர்களோடு சேர்ந்து, வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து ரிலையன்ஸ் நிறுவன கேபிள் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு நண்பர்கள், தீபக், மனோஜ் மற்றும் பவன் ஆகியோருடன் சேர்ந்து மது குடித்தபடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, குடி போதையில், நண்பர்கள் பற்றி சந்தோஷ் ஏதோ சொல்லப்போக, ஆத்திரத்தில் கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளனர் சக நண்பர்கள். இதில் சந்தோஷ் பலியானார். சுப்பிரமணியபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக், மனோஜ் மற்றும் பவனை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications