யுவராஜ் சிங் போதைப்பொருள் உட்கொண்டார்: தம்பி மனைவி பகீர் தகவல்
மும்பை: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவரது தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பி ஜொராவரின் மனைவி ஆகான்ஷா சர்மா பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். ஆகான்ஷா ஜொராவரை பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் யுவராஜ் சிங்கின் குடும்பம் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்நிலையில் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதன் பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
யுவராஜின் குடும்பத்தாருக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உண்டு. என் கணவரோடு சேர்ந்து நானும் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கிறேன்.
தானும் போதைப்பொருள் உட்கொண்டதாக யுவராஜ் என்னிடம் தெரிவித்துள்ளார். என் மாமியார் என் குற்றச்சாட்டை மறுத்து ஏதாவது சொல்லட்டும் பார்ப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications