ஒரு 'ஜீரோ' மோடிக்கு 'ஜீரோ' போட்டுள்ளதே, அடடே ஆச்சரியக்குறி: வெங்கைய்யா நாயுடு
டெல்லி: ஜீரோவால் ஹீரோவை கண்டுகொள்ள முடியாது. ஜீரோவால் ஜீரோவை தான் கண்டுபிடிக்க முடியும் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பற்றி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளது.
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்துள்ளது. பாஜகவோ தங்கள் அரசின் ஓராண்டு சாதனைகளை பெருமையாக கூறி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியோ மோடி அரசுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் அளித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ராகுலை ட்விட்டரில் விளாசித் தள்ளியுள்ளார்.
|
ஜீரோ
தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ராகுல் ஜீரோ மதிப்பெண் வழங்கியுள்ளார். ஜீரோக்களால் ஹீரோக்களை கண்டுகொள்ள முடியாது. ஜீரோக்களால் ஜீரோக்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று நாயுடு ட்வீட் செய்துள்ளார்.
|
மாயம்
ஒருவர் தன்னைத் தானே புரிந்து கொள்ள திடீர் என்று மாயமாகி வெளிநாட்டில் 57 நாட்கள் இருந்தார். அத்தகையவர் நாட்டின் நலனுக்காக பாடுபடும் நரேந்திர மோடி மீது குறை கூறுகிறார் என்கிறார் நாயுடு.
|
மோடி
ராகுல் காந்திக்கு 7 மாதத்திற்கு ஒரு முறை தான் அமேதி நினைவு வருகிறது. ஆனால் மோடியோ 125 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்க உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இரவு, பகலாக பாடுபடுகிறார்.
|
காங்கிரஸ்
நரேந்திர மோடி இனி வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது காங்கிரஸ் என நாயுடு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications