ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்- புகுஷிமா அணு உலையை தாக்கிய சுனாமி பேரலைகள்!
ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டோக்கியோ: ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து எழுந்த சுனாமி பேரலைகள் புகுஷிமா அணு உலை பகுதியை மிக ஆக்ரோஷமாக தாக்கின.
ஜப்பானில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி இருந்தது.

ஜப்பானின் புகுஷிமா அணு உலை பகுதியை மையமாகக் கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு சுனாமி பேரலைகள் புகுஷிமா அணு உலை பகுதியை ஆக்ரோஷத்துடன் தாக்கின. இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நியூசிலாந்தின் தெற்கு தீவு பகுதிகளிலும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்மையில்தான் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications