ஏமனின் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
Recommended Video
ஏமனின் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதல்..
ஏடன்: ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகினர்.
ஏமனில் கடலோரத்தில் உள்ளது மோச்சா நகரம். இங்கு அரசுக்கு ஆதரவான ராணுவ தளங்கள் உள்ளன. இந்த நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மோச்சா நகரில் உள்ள வெவ்வேறு ராணுவ தளங்கள் மீது 4 ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடந்தது. இதில் இரு ஏவுகணைகள் நாட்டின் உணவு பாதுகாப்பு குடோன்களின் மீது விழுந்தது.
இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகிவிட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். ஜெயன்ட்ஸ் பிரிகேடியர்ஸ் ராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த ஆளில்லா விமான குடியிருப்புகள் மீது விழுந்தன. இதில் 4 பேர் பலியாகிவிட்டனர்.
இதனால் ஏமன் நாட்டின் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications