தப்பியோடிய அப்பாவிகள் 100 பேரின் தலையை துண்டித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்... மோசூல் பயங்கரம்
மோசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்ப முயன்ற அப்பாவி மக்கள் 100 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
மோசூல்: ஈராக்கில் தங்களது பிடியில் உள்ள மோசூல் நகரில் இருந்து தப்ப முயன்ற 100 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின பிடியில் உள்ள மோசூல் நகரை கைப்பாற்ற ஈராக் ராணுவம் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் கடுமையாக போராடி வருகின்றனர். தீவிரவாதிகளுடன் நடைபெறும் சண்டையில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த ஹம்மாம் அல்-அலில் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய ஈராக் ராணுவத்தினர் அங்குள்ள விவசாய கல்லூரிக்கு வெளியே புதிதாக புதைக்கப்பட்டிருந்த பகுதியை தோண்டிப் பார்த்தனர். அப்போது அதில் தலையில்லாமல் புதைக்கப்பட்டிருந்த 100 பேரின் சடலங்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து உயிருக்கு பயந்து தப்பியோடிய போது கொல்லப்பட்டிருக்கலாம் என ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
மோசூல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 9 வயது சிறுவர்களை பிடித்துச் செல்லும் ஐஎஸ் படையினர் அவர்களை ஈராக் படைக்கு எதிராக போரிட வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும் ஈராக் ராணுவம் மற்றும் கூட்டுப்படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் 25 ஆயிரம் பேரை மனித கேடயங்களாக ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாக ஐ.நா செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் அமைப்பினர் இதுவரை 480க்கும் மேற்பட்ட அப்பாவிகளை கொன்றுள்ளதாகவும் அவர்களில் 300க்கு மேற்பட்டவர்கள் சிறுவர்கள் என்றும் லண்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications