100 வயதிலும் துணிகளை வெளுத்தெடுக்கும் கொள்ளு பாட்டி ...!!!
நியூயார்க்: அமெரிக்காவின் பபல்லோ நகரைச் சேர்ந்தவர் பெலிமினா ரோட்டுண்டோ என்ற 100 வயது மூதாட்டி. இவர் வாரத்துக்கு ஆறு நாட்கள் இப்பகுதியிலுள்ள ஒரு டிரை கிளீனரில் (சலவை நிலையம்) மிகுந்த ஆர்வத்தோடு வேலை செய்து வருகிறார்.
தினமும் காலை 7 மணிக்கு தனது வேலையை தொடங்கும் இவர் மாலை 6 மணி வரை சுறுசுறுப்பாக உழைக்கிறார். ஒரு நாளைக்கு பதினோரு மணிநேரம் உழைக்கும் பெலிமினா இதுகுறித்து பேசும்போது,

இந்த வேலை மிகுந்த மன நிறைவை அளிகிறது. வேலை நேரத்தின் போது வாடிக்கையாளர்களிடம் பேசுவது மனதிற்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. வயது மூப்பின் காரணமாக பெரும்பாலானோர் வீட்டிலேயே தங்களை முடக்கிக் கொள்வார்கள். ஆனால் ஓய்வெடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், பலர் தங்களது பணியிலிருந்து சீக்கிரமாகவே ஓய்வு பெறுகின்றனர். எனவே ஓய்வுபெறும் வயதை குறைந்தபட்சம் எழுபத்தைந்தாக மாற்ற வேண்டும் என்றார்.
1915-ஆம் ஆண்டு பிறந்த ரோட்டுண்டோ ஆகஸ்டு மாதம் தனது 100-வது வயதை அடைந்தார். கடந்த 85 வருடங்களாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், 40 வருடங்களாக இந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
தன்னால் இயங்கக் கூடிய நாள் வரை இந்தப் பணியை திறம்பட செய்வேன் என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் ரோட்டுண்டோ.












Click it and Unblock the Notifications