சீனா: சுரங்கத்தில் சிக்கிய 13 தொழிலாளர்கள் – 6 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்பு
பீஜிங்: சீனாவில் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 13 தொழிலாளர்கள் 140 மணிநேரத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு சீனாவின் குயிழோ மாகாணத்தில் உள்ள ஷிகியான் பகுதியில் நெடுஞ்சாலை சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
வழக்கம்போல், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பணிகள் நடைபெற்று வந்த போது, திடீரென்று அந்த சுரங்கம் இடிந்து விழுந்ததால் அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த 13 பணியாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்டனர்.
இடிந்த சுரங்கத்தின் பக்கவாட்டில் சுமார் அரை கிலோ மீட்டர் நீளமுள்ள மாற்றுச் சுரங்கம் தோண்டப்பட்டு, அதன் வழியாக உள்ளே சிக்கிக் கொண்டவர்களுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் மற்றும் உணவு, குடிநீர் ஆகியவற்றை அதிகாரிகள் அளித்தனர்..
டாக்டர்கள் ஆலோசனையின்படி, இவர்களுக்கு உணவாக முட்டை, கஞ்சி, பால், வாழைப்பழம் உள்ளிட்ட சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்
சுமார் 140 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்டவர்கள் அனைவருமே நல்ல உடல்நிலையுடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications