தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தியாவில்தான் அதிகம்.. 150% அதிகரித்த கொரோனா.. எச்சரிக்கும் ஹூ!
ஜெனீவா: தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருப்பது இந்தியாவில்தான் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 150 சதவிகிதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மத்திய சுகாதாரத்துறை அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றையடுத்து, டெல்டா என்ற வேரியண்ட் பரவியது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகியது. அதையடுத்து ஒமிக்ரான் என்ற கொரோனா வைரஸின் வகை உலகமெங்கும் வெகு வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியா
உலக சுகாதார நிறுவனம் அறிக்கையின்படி, இந்தியாவில் இந்த வாரம், 15 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருக்கிறது. இதுவே கடந்த வாரம் 6 லட்சமாக இருந்தது. தற்போது இது பலமடங்காக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் நேற்றைவிட 8.2 சதவிகிதம் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளன. தொற்றை இன்னும் குறைக்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்படும்.

மொராக்கோ
அதேபோல், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் மொராக்கோ நாட்டிலும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றது. கடந்த வாரம் 4610 ஆக இருந்த பாதிப்பு தற்போது 31,701 ஆக அதிகரித்துள்ளது. இது 45 சதவிகித அதிகரிப்பாகும். அதேபோல் லெபனானில் 19 சதவிகிதமும், டுனிசியாவில் 194% கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

ஒமிக்ரான்
அதேபோல், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஒமிக்ரான் வைரஸ் 171 நாடுகளில் பரவி இருக்கிறது. ஒமிக்ரானால் இறப்பு விகிதம் குறைவு என்றாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஒமிக்ரானின் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் டெல்டா வகை வைரஸ்களைவிட கடுமையான பாதிப்புகள் இந்த ஒமிக்ரானால் ஏற்படவில்லை. ஆனால் இந்த தொற்றால் அதிகமானோர் சீக்கிரத்தில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
Recommended Video

ஸ்டெல்த் ஒமிக்ரான்
ஒமிக்ரான் வைரஸில் இருந்து புதிய வகை வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதை 'ஸ்டெல்த் ஓமிக்ரான்' என்று அழைக்கின்றனர். நாற்பது நாடுகளுக்கு மேல் இந்த வகை ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த "ஸ்டெல்த் ஓமிக்ரான்" தற்போது ஐரோப்பா முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications