துனிசியா நாடாளுமன்றம் அருகே திடீர் துப்பாக்கிச் சூடு: 17 வெளிநாட்டவர் உட்பட 19 பேர் பலி!
டுனிஸ்: துனிசியா நாடாளுமன்றம் அருகே உள்ள மியூசியத்துக்குள் நுழைந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியாகினர். இத்தாக்குதலை நடத்திய 2 ஆயுததாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்தியது ஐ.எஸ். தீவிரவாத இயக்கமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனியாவின் நாடாளுமன்றம் அருகே உள்ளது புகழ்பெற்ற பார்டோ மியூசியம். இன்று பகலில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் திடீரென மியூசியத்துக்குள் நுழைந்தனர்.

பின்னர் மியூசியத்தைப் பார்வையிட பேருந்தில் வந்த வெளிநாட்டவர் மீது கண்மூடித்தனமாக அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் மேலும் 10 வெளிநாட்டவரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர் ஆயுததாரிகள்.
பிணைக் கைதிகளை மீட்க ராணுவம் ஆயுததாரிகள் மீது துனிசியா ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பிணைக் கைதிகள் தம் வசம் இருந்த 10 வெளிநாட்டவரையும் கொன்றுவிட்டனர். ஒருவழியாக ஆயுததாரிகளை துனியா ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
ஆயுததாரிகளின் தாக்குதலில் மொத்தம் 19 பேர் பலியாகினர். இதில் 17 பேர் வெளிநாட்டவர். 2 பேர் துனிசியா நாட்டவர்.
அரபு வசந்தம் என்ற ஆட்சி மாற்றப் புரட்சியை எதிர்கொண்டிருந்தது துனிசியா. அதே நேரத்தில் சிரியா மற்றும் ஈராக்கில் தனி இஸ்லாமிய அரசை நிறுவியிருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் துனிசியா நாட்டைச் சேர்ந்தோர் பெருமளவில் இணைந்துள்ளனர்.
அண்மையில் கூட, துனிசியா மக்கள் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது என்று சமூக வலைதளங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த ஆயுததாரிகளும் ஐ.எஸ். இயக்கத்தினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் துனிசியா நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதுதான் இந்த ஆயுத கும்பலின் இலக்காக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, இந்த சம்பவம் துனிசியாவில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications