For Daily Alerts
Just In
சோனியாவுக்கு எதிரான வழக்கு- அமெரிக்க நீதிமன்றத்தில் தள்ளுபடி
வாஷிங்டன்: சீக்கியர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் தவைவர் சோனியாகந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
1984ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தில் தொடர்புள்ள காங்கிரஸ்காரர்களுக்கு சோனியாகாந்தி பாதுகாப்பு அளிப்பதாக கூறி 'நீதிக்கான சீக்கியர்' என்ற அமைப்பு சார்பில் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் சோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் வழக்கில் சோனியா தரப்பில் இருந்து ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரமும் அதைச்சார்ந்த சம்பவங்களும் முழுக்க இந்தியாவில் நடந்ததால் அமெரிக்க நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Comments
English summary
A US court has dismissed a case against the Congress in connection with the 1984 anti-Sikh riots, saying the event is "entirely on foreign soil" and does not concern America.
Story first published: Tuesday, April 29, 2014, 11:18 [IST]