தனிமைப்படுத்தப்படாத பயணிகள்.. கொரோனா அபாயம்.. நடுக் கடலில் கப்பலில் தவிக்கும் 200 இந்தியர்கள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நடு கடலில் தவிக்கும் 3500 பேர்.. வேகமாக பரவும் கொரோனா.. திரில்லர் படங்களை மிஞ்சிய பயங்கரம் - வீடியோ

    டோக்கியோ: கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த கப்பல் 200 இந்தியர்களுடன் நடுக்கடலில் தவித்து வருவதால் தங்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி 400-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் சீனாவிலிருந்து வரும் பொருட்களையும் சுற்றுலா பயணிகளையும் பெரும்பாலான நாடுகள் தடை விதித்துள்ளன.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    இந்த நிலையில் ஹாங்காங்கிலிருந்து 3700-க்கும் மேற்பட்டோருடன் ஜப்பான் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா பீதியால் அந்த கப்பல் யோக்கோஹாமா துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் உள்ள 64 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த 64 பேரும் தனிமைப்படுத்தப்படாமல் ஒரே கப்பலில் இருப்பது கொரோனா வைரஸ் பாதிப்பில்லாதோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    மம்தா பானர்ஜி

    மம்தா பானர்ஜி

    இதனால் சீனாவில் உள்ள வுகான் நகரில் இந்தியர்களை மீட்டது போல் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்குமாறு மேற்கு வங்க மாநிலத்தவர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில் விதிகளை மீறி நான் பேசியது தவறுதான்.

    நிறுத்தி

    நிறுத்தி

    இப்படி பேசாமல் இருந்தால் நாளை நான் உயிரோடு இருப்பேனா, அல்லது இறந்துவிடுவேனா என எனக்கு தெரியவில்லை என தெரிவித்திருந்தார். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கப்பலில் இருப்போர் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்திய ஊழியர்களும் பயணிகளும் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கின்றனர்.

    அபாயம்

    அபாயம்

    தூதரகத்தின் தகவலின் அடிப்படையில் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது என்றார். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை நடுக்கடலில் நிறுத்தப்பட்ட இந்த கப்பலில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளது. கப்பலில் உள்ள வயதானோருக்கு நோய் பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+