For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிர் தினத்தன்று பஞ்சாபில் 5 ஸ்டார் ஹோட்டல் ஊழியை 2 பேரால் பலாத்காரம்

By Siva
Google Oneindia Tamil News

லூதியானா: மகளிர் தினத்தன்று பஞ்சாபில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் பெண் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் மகளிர் தினத்தன்று அதிகாலை 1.15 மணிக்கு தோழி வீட்டுக்கு சென்றுவிட்டு தான் தங்கியிருக்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாருதி 800 காரில் வந்த 3 பேர் அவரை வாகனத்திற்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு சென்றனர்.

21-year-old abducted, gang raped in Ludhiana

அந்த நபர்கள் நம்பர் பிளேட்டை கருப்பு துணியால் மறைத்திருந்தனர். அவர்கள் காரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஓட்டிச் சென்றனர். அங்கு அந்த பெண்ணிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு அவரை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். காரை ஓட்டிய 3வது நபரோ அந்த பெண்ணை கடித்துள்ளார்.

பின்னர் அந்த நபர்கள் அவரை ஹாஸ்டல் அருகே கொண்டுவந்து விட்டுவிட்டு சிம் கார்டை எடுத்துக் கொண்டு அவரின் செல்போனை கீழே வீசிவிட்டுச் சென்றனர். அந்த பெண்ணின் தோழிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து அந்த பெண் கூறுகையில்,

என்னை கடத்தியவர்கள் ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தவர்கள் போன்று இந்தியில் பேசினர். முந்தைய நாள் தான் வேறொரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக பெருமையாக தெரிவித்தனர். போராடினால் நிர்பயா கதி தான் எனக்கும் என்று மிரட்டினர். அதில் இருவரின் பெயர் மோனு, விக்கி ஆகும் என்றார்.

English summary
A 21-year old five star hotel employee was abducted and gangraped by two men in Ludhiana on women's day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X