தொழுகையின் போது பாக்., மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 22 பேர் பலி; 29 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மசூதி ஒன்றில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 22 பேர் பலியாகினர். 29 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் தொழுகையின் போது இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய பழங்குடியின பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

22 killed in suicide bomb attack in Pakistan mosque

இந்த தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 22 பேர் கொல்லப்பட்டனர். 29 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தாக்குதல் குறித்து, மசூதியின் அதிகாரி நவீட் அக்பர் கூறுகையில், "மக்கள் கூட்டம் அதிகம் இருந்த மசூதியில் தற்கொலைப் தாக்குதலை நடத்திய நபர் இருந்தார். அல்லாஹூ அக்பர் என்று அந்த நபர் முழக்கமிட்ட பின்னர் அங்கே குண்டு வெடித்தது" என்று தெரிவித்தார். இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+