Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

26/11 தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்ட்! ஹபிஸ் சயத்தின் நெருங்கிய கூட்டாளி சுட்டுக்கொலை! பரபர பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: 26/11 மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் மாஸ்டர் மைண்ட் ஹபிஸ் சயத்தின் நெருங்கிய கூட்டாளியான முப்தி கைசர் பாரூர் பாகிஸ்தானனில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அதுபற்றிய திடுக்கிடும் தவல் வெளியாகி உள்ளது.

2008.. நவம்பர் 26.. இந்தியாவை பொறுத்தமட்டில் மிகவும் சோகமான நாளாகும். அன்றைய தினம் யாரும் எதிர்பாராத வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.

26/11 terror attack master mind Hafiz Saeed Close Associate Mufti Qaiser Farooq Shot Dead in Pakistan

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நவீன துப்பாக்கிகளுடன் தெற்கு மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சிஎஸ்டி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, யூதர்களின் வழிபாட்டுத்தலம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில் மொத்தம் 175 பேர் வரை பலியாகினர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ-தொய்பா தீவிரவாத அமைப்பால் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நவம்பர் மாதம் (11வது மாதம்) 26ம் தேதி நடந்ததால் 26/11 என அழைக்கப்படுகிறது. இந்த கொடூரமான தாக்குதலை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு நிகழ்த்தியது. கராச்சி துறைமுகத்திலிருந்து சாட்டிலைட் போன்களுடன் மும்பைக்கு படகுகளில் வந்து அவர்கள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம் வருகின்றனர். அவர்களை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு இன்னும் முன்வரவில்லை. தொடர்ந்து தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரவணைத்து வருகிறது. இந்த மும்பை தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்ட்டாக இருந்தவர் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் செல்வாக்கு பெற்ற தலைவரான ஹபீஸ் சயத் ஆவார்.

இவர் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பாகிஸ்தானிலேயே இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் தான் ஹபீஸ் சயத்தின் நெருங்கிய கூட்டாளியுமான முப்தி கைசர் பாரூக் பாகிஸ்தான் கராச்சியில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை அடையாளம் தெரியாத நபர் சுட்டுக்கொலை செய்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகையான Dawn செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கராச்சியில் உள்ள சாமனாபாத் பகுதியில் 30 வயது நிரம்பிய முப்தி கைசர் பாரூக் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது ஒரு குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதலாகும். துப்பாக்கிச்சூட்டில் குண்டு காயமடைந்து உயிருக்கு போராடியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே முப்தி கைசர் பாரூக் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் என்று இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் சிலர் கூட்டமாக நடந்து வருகின்றனர். அப்போது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. இதில் ஒருவரின் உடலில் குண்டு பாய்கிறது. இதையடுத்து அவர் சரிந்த விழ மற்றவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடுகின்றனர். இதில் குண்டு பாய்ந்து சரிந்த விழுந்த நபர் தான் முப்தி கைசர் பாரூக் என கூறப்படுகிறது. ஆனால் இந்த வீடியோ உண்மையானதா? இல்லை வேறு இடத்தில் நடந்த நிகழ்வை முப்தி கைசர் பாரூக் சுட்டு கொலை செய்யப்பட்டதாக பரப்பப்படுகிறதா? என்பதில் குழப்பம் உள்ளது. இதனை இன்னும் பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+