யோகா தெரியும், கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட 'டோகா' பற்றி தெரியுமா உங்களுக்கு?
பெய்ஜிங்: ஹாங்காங்கில் புதிய உலக சாதனை படைக்க 270 நாய்கள் தங்களின் உரிமையாளர்களுடன் சேர்ந்து டோகா எனப்படும் யோகாவை செய்துள்ளன.
நாய்கள் யோகா செய்வதற்கு டோகா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாங்காங்கில் டோகாவில் புதிய உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. டோகா ஆசிரியர் சூசட் ஆக்கர்மேன் தலைமையில் நடந்த டோகா நிகழ்ச்சியில் 270 நாய்கள் தங்கள் உரிமையாளர்களுடன் கலந்து கொண்டு ஒரு மணிநேரம் யோகா செய்தன.

உரிமையாளர்கள் தங்கள் செல்ல நாய்கள் யோகா செய்ய உதவினர்.
இது குறித்து ஆக்கர்மேன் கூறுகையில்,
டோகா மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன். டோகா நிகழ்ச்சி நல்லவிதமாக நடந்தது. ஹாங்காங் மக்கள் வேலை வேலை என்று பிசியாக உள்ளனர். அவர்களில் பலர் செல்லப் பிராணிகள் வளர்த்தாலும் அதை பணியாட்கள் தான் கவனித்துக் கொள்கிறார்கள். டோகா வகுப்பிற்கு வந்தால் குறைந்தது ஒரு மணிநேரமாவது உங்கள் நாயுடன் நேரம் செலவழிக்கலாம்.
டோகா வகுப்பில் நீங்களும், உங்கள் நாயும் மட்டும் தான் இருப்பீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே இன்டர்நெட், ஃபேஸ்புக், செல்போன் என எதுவும் இருக்காது. அதனால் உங்களின் செல்லப்பிராணியுடன் நன்கு பழக முடியும் என்றார்.
டோகா நிகழ்ச்சி இன்னும் கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்று டோகா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications