For Daily Alerts
Just In
அமெரிக்கா: மேரிலாண்ட்டில் துப்பாக்கிச் சூடு-3 பேர் பலி
மேரிலாண்ட்: அமெரிக்காவின் மேரிலாண்ட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் ஹார்போர்டு கவுண்டியில் எம்மோர்டன் அலுவலக வளாகம் இருக்கிறது. அங்கு மர்ம நபர் ஒருவர் நேற்று காலை திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் பெயர் ரடீ லபீப் பிரின்ஸ். அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Comments
English summary
A gunman is killing three in Maryland office park.
Story first published: Thursday, October 19, 2017, 7:25 [IST]