கனடா உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 30 தமிழர்கள்.. ராதிகா வரிசையில் சேருவாரா கிரிசாந்தி?
டோரன்டோ: கனாடவில் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.
டோரன்டோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழர்கள் பலர் வேட்பாளர்களாக களம் கண்டுள்ளனர். இதனால் இந்தப் பகுதிகளில் தேர்தல் களை கட்டியுள்ளது.
டோரண்டோவில் தமிழர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களிடம் தமிழ் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

கட்சி பாகுபாடு கிடையாது
நம்மூரைப் போலவே கனடாவிலும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி முக்கியமாக இருக்காது. மாறாக, வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, அவர்களின் செயல்திறன், சாதனைகள் ஆகியவையே முக்கியமாக பார்க்கப்படும்.

3 பதவிகளுக்கு
இந்தத் தேர்தலானது கல்விச்சபை உறுப்பினர், நகரசபை உறுப்பினர், நகர மேயர் ஆகியப பதவிகளுக்கான தேர்தலாகும்.

போட்டி
ஒரே பதவிக்கு சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் போட்டியில் உள்ளதால் அங்கு போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

வெற்றி வாய்ப்பு
தற்போதைய நிலையில் 5 இடங்களில் தமிழர்கள் வென்றால் அது பெரும் சாதனையாக கருதப்படும். அதேசமயம், 3 அல்லது 4 இடங்களில் வென்றாலும் கூட சிறப்பானதே என்று அங்குள்ள தமிழர்கள் கூறுகிறார்கள்.

30க்கும் மேற்பட்டோர்
இந்தத் தேர்தலில் 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களததில் உள்ளனராம்.இவர்கள் தீவிரப் பிரசாரத்திலும் குதித்துள்ளனர்.

கிரிசாந்தி
2003-2006ல்
2003, 2006ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட தற்போது அதிக அளவிலான தமிழர்கள் போட்டிக் களத்தில் உள்ளனர்.

முதல் தமிழ் வெற்றி
கனடா உள்ளாட்சித் தேர்தலில் வென்ற முதல் தமிழர் என்ற பெருமை லோகன் கணபதி என்பவரையே சாரும். இவர் 2006ல் வெற்றி பெற்றார்.

முதல் தமிழ் எம்.பி ராதிகா
அதேபோல கனடா நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழர் என்ற பெருமை கொண்டவர் ராதிகா சித்சபேசன் ஆவார். இவரது வெற்றிக்குப் பிறகுதான் தமிழர்கள் அங்கு உத்வேகம் பெற்றனர்.

கிரிசாந்தி
தற்போதைய தேர்தலில் கிரிசாந்தி சரோஜ்குமாரன் உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications