நேபாளத்தில் 22 மணிநேரம் இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 மாத குழந்தை உயிருடன் மீட்பு
காத்மாண்டு: நேபாளத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 மாத குழந்தையை மீட்பு பணியினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு 22 மணிநேரங்கள் கழித்து பக்தபூர் நகரில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து 4 மாத ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது என்று காத்மாண்டு டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்பு பணியினர் பக்தபூரில் இடிபாடுகளை அகற்றியபோது ஒரு இடத்தில் இருந்து குழந்தை அழும் சப்தம் மெதுவாக கேட்டுள்ளது. சப்தம் வந்த இடத்தில் இடிபாடுகளை அகற்றியபோது அங்கு 4 மாத குழந்தை இருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.
சோனித் அவால் என்ற அந்த குழந்தை காயம் எதுவும் இன்றி நல்ல நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காத்மாண்டுவில் இடிபாடுகளுக்கு இடையே 50 நேரமாக இருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.
இதையடுத்து 80 மணிநேரமாக இடுபாடுகளில் சிக்கித் தவித்த வாலிபர் ஒருவரும் பத்திரமாக மீட்கப்பட்டார். நேபாளத்தில் இடிபாடுகளில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications