உக்ரைன் உள்நாட்டு கலவர கடைசி கட்டத்தில் மட்டும் 400 பேர் உயிரிழப்பு – ஐ.நா.சபை தகவல்!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: உக்ரைனில் நடைபெற்ற உள்நாட்டுக் கலவரத்தில் கடைசி நாட்களில் மட்டும் கிட்டதட்ட 400 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் குழக்கு பகுதியில் டொனனெஸ்ட்க், மின்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் ரஷிய ஆதரவாளர்கள் மெஜாரிட்டி ஆக உள்ளனர்.

தங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது உள்நாட்டு கலவரமாக மாறியது.
கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா ஆதரவு அளித்தது. இதனால் அவர்கள் ராணுவத்துடன் கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டை 6 மாதங்கள் நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம் இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
உள்நாட்டு போரின் போது இரு தரப்பிலும் மொத்தம் 4,035 பேர் பலியாகினர். போர் நடந்த கடைசி 10 நாட்களில் மட்டும் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை, ஐ.நா சபை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications