பாகிஸ்தானில் பதவி இழந்த இம்ரான்கான்.. 43 சதவீத மக்கள் அதிருப்தியாம்! வெளியானது சர்வே முடிவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான்கான் ஆட்சியை இழந்ததற்கு 43 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளதாக சர்வே முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில் திடீரென்று சொந்த கட்சியின் எம்பிக்கள், கூட்டணி கட்சியினர் இம்ரான்கானுக்கு எதிராக செயல்பட துவங்கினர்.
இம்ரான்கானுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்தார். அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

பதவி இழந்த இம்ரான்கான்
இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. ஆனால் இம்ரான்கான் தந்திரமாக செயல்பட்டு வாக்கெடுப்பை நடத்த விடாமல் துணை சபாநாயகர் மூலம் தடுத்தார். மேலும் அதிபர் உதவியுடன் நாடாளுமன்றத்தை கலைத்தார். இதை எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு நடந்தது. இதில் இம்ரான்கான் தோல்வியடைந்தார்.இதன்மூலம் அவர் பிரதமர் பதவியை இழந்தார்.

புதிய பிரதமர்
இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பியாவார்.
இந்நிலையில் தான் இம்ரான்கான் ஆட்சி குறித்தும், அவர் பிரதமர் பதவியை இழந்தது பற்றியும் ‛Gallup pakistan' எனும் சர்வே மேற்கொள்ளப்பட்டது.

சரிதான் என 57 சதவீதம் பேர்
இந்த சர்வே பாகிஸ்தானில் உள்ள 100 மாவட்டங்களில் 1000 ஆண்கள், பெண்களிடம் எடுக்கப்பட்டது. இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி இம்ரான் கான் ஆட்சியை இழந்ததது சரிதான் என 57 சதவீதம் பேர் கூறியுள்ளனர். உண்மையில் பொருளாதார தேக்கநிலையை சரிசெய்வதில் இம்ரான்கான் தோல்வியடைந்துவிட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியை விட்டு செல்வது நல்லது தான். இல்லாவிட்டால் நாடு இக்கட்டான சூழலை சந்திக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

43 சதவீதம் பேர் அதிருப்தி
மாறாக 43 சதவீதம் பேர் இம்ரான்கான் ஆட்சியை இழந்ததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். இம்ரான்கான் நேர்மையான முறையில் தான் ஆட்சியை செய்து வந்தார். பிரதமர் பதவியை அவர் இழந்தது வருத்தமாக உள்ளது. பொருளாதார தேக்கநிலை இருந்தாலும் கூட இம்ரான்கான் ஊழல், முறைகேடு செய்யாமல் ஆட்சியை மேற்கொண்டு வந்தார் என தெரிவித்துள்ளதாக அந்த சர்வே முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications