லாவோஸ்: ஆற்றுக்குள் விமானம் விழுந்ததில் 11 நாடுகளைச் சேர்ந்த 49 பயணிகள் பலி

Subscribe to Oneindia Tamil

49 believed dead in plane crash in Laos
வியஞ்சான்: லாவொஸ் நாட்டு விமானமொன்று ஆற்றில் விழுந்ததில் 11 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 49 பயணிகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு லாவோஸ். இந்நாட்டின் வடமேற்கில் சீனாவும் மியான்மாரும் கிழக்கில் வியட்நாம் நாடும் தெற்கில் கம்போடியா, மேற்கில் தாய்லாந்து ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன.

நேற்று, லாவோஸில் உள்ள லாவோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தலைநகர் வியன்டியானேவில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது.

லாவோசில் உள்ள மேகாங் என்ற ஆறு அருகே சென்ற போது, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால், விமானம் திடீரென நடுஆற்றுக்குள் விழுந்து நொறுங்கியது. தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை இந்தக் கோடூர விபத்தில் சிக்கி, 11 நாடுகளைச் சேர்ந்த 49 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+