நேபாளத்தில் லேசான நிலநடுக்கம்.. பீதியில் வட இந்தியா
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நேபாளத்தில் சில மாதங்கள் முன்பு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று காலை 9.45 மணியளவில், நேபாளத்தில் நில அதிர்வு உணரப்பட்டது.

தலைநகர் காத்மாண்டு அருகே இந்த நில நடுக்கம் மையம் கொண்டு தாக்கியதாக, அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில், இது 5 முதல் 5.3 ஆக பதிவாகியிருந்ததாகவும், ஆய்வு மையம் கூறியுள்ளது. நேபாளத்தில், இந்த நிலநடுக்கத்தால், உயிர்களுக்கு பாதிப்பு இல்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், டெல்லி முதல் கொல்கத்தாவரை, வட இந்தியாவின் பெரும்பான்மையாக பகுதிகளில் எதிரொலித்தது. எனவே, இந்தியாவிலும், இந்த நிலநடுக்கம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications