மெக்சிகோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
ஜலிஸ்கோ: தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோ நாட்டின் தெற்கு பசுபிக் கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

ஜலிஸ்கோ என்ற இடத்தில் கடலுக்கு அடியில் 105 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியது. இதனால், பீதி அடைந்த மக்கள் தெருக்களில் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் குறித்தும், பொருட் சேதம் குறித்தும் உடனடியாக எந்த தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications