வீட்டுக்குள் பாம்புக் குவியல்... வளைத்து வளைத்துப் பிடிக்கப்பட்ட 60 பாம்புகள்!
பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோரில் ஒரு வீட்டிலிருந்து 60 பாம்புகளை பிடித்துள்ளனர் விலங்கியல் பாதுகாவலர்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடிக்க பிடிக்க பாம்புகள் வந்து கொண்டே இருந்ததால் பாம்பு பிடிக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தங்களது பேஸ்புக் பக்கத்தில் பால்டிமோர் விலங்குகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையம் படத்துடன் செய்தி போட்டுள்ளது.

இந்த பாம்புகளின் நீளம் சராசரியாக 4 முதல் 5 அடி நீளம் உள்ளது. என்ன மாதிரியான பாம்புகள் சிக்கின என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இத்தனை பாம்புகளையும் இந்த மையத்தில் வைத்துப் பராமரிக்க வசதி இல்லையாம். நாய், பூனைகளுக்குத்தான் இங்கு பொதுவாக இடம் உண்டு. ஆனால் இத்தனை பாம்புகள் சிக்கியதால் இந்த மையத்தினர் பெரும் குழப்பமும், வியப்பும் அடைந்துள்ளன்.
தற்போது பாதுகாப்பான அறைக்குள் இந்த பாம்புகளை பத்திரமாக வைத்துள்ளனராம். பாம்புகளுக்கான வேறு மையத்திற்கு இதை விரைவில் மாற்றவுள்ளனராம்.












Click it and Unblock the Notifications