68 பேர் துடிதுடித்து உயிரிழப்பு.. ஏமனில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து! அதிகாலையில் பெருந்துயரம்
சனா: ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல முயன்ற அகதிகள் கப்பல் ஏமன் அருகே விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 74 பேர் மாயமாகினர். மாயானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவு என்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பலரும் எப்படியாவது வறுமையில் இருந்து தப்பிக்க மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதுபோல செல்வோர் பெரும்பாலும் ஆபத்தான ரூட்களில் படகுகளில் செல்கிறார்கள். அது பல நேரங்களில் அவர்கள் உயிரிக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது. மீண்டும் அப்படியொரு ஷாக் சம்பவம் இப்போது நடந்துள்ளது.

உயிரிழப்பு
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏடன் வளைகுடாவில் உள்ள ஏமன் கடற்கரை அருகே அகதிகள் வந்த படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 68 பேர் உயிரிழந்தனர். மேலும் 74 பேர் காணாமல் போயினர். ஐநா இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில், இது ஏமன் கடற்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் கடற்கரை பகுதியில் படகு விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த மோசமான விபத்து நடந்துள்ளது. எப்போதும் நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர், வறுமை மற்றும் மோதலில் இருந்து தப்பித்து, வளைகுடா அரபு நாடுகளை அடைய முயல்கிறார்கள். இப்போது இதுபோன்ற மோசமான விபத்துகள் அரங்கேறி விடுகின்றன. இந்த குறிப்பிட்ட படகில் 154 எத்தியோப்பிய புலம்பெயர்ந்தோர் பயணித்துள்ளனர்.
என்ன நடந்தது
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏமனின் தென் மாகாணமான அப்யானுக்கு அருகே ஏடன் வளைகுடாவில் படகு மூழ்கியது. இதுவரை கன்ஃபர் மாவட்டத்தில் 54 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கரை ஒதுங்கியதாக ஏமனில் உள்ள சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) தலைவர் அப்துசத்தோர் ஈசோவ் தெரிவித்துள்ளார். மேலும் 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, அப்யான் மாகாண தலைநகரான ஸின்ஜிபார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இந்த விபத்தில் 12 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும், மீதமுள்ள அனைவரும் காணாமல் போனதாகவும் ஈசோவ் தெரிவித்தார். இருப்பினும், அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவு என்றே அஞ்சப்படுகிறது.
கரையொதுங்கிய சடலங்கள்
இது தொடர்பாக அப்யான் பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், பெரிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்கரையில் பல இடங்களில் சடலங்கள் கரையொதுங்கியதாகவும் அப்யான் பாதுகாப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க உட்படப் பல நாடுகளில் இருந்து மக்கள் இந்த ஏமன் ரூட் வழியாகவே அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முயல்கிறார்கள். ஏமனில் 10 மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தாலும் கூட இந்த ரூட் வழியாகவே செல்ல அகதிகள் விரும்புகிறார்கள். சின்ன படகுகளில் அளவுக்கு அதிகமானோர் செங்கடல் அல்லது ஏடன் வளைகுடா வழியாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த அவர்களுக்கு ஆபத்தானதாக மாறுகிறது.
தொடர்கதையாகும் விபத்துகள்
கடந்த சில மாதங்களில் மட்டும் ஏமன் அருகே நடந்த கப்பல் விபத்துகளில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர். மார்ச் மாதம் ஏமன் மற்றும் ஜிபூட்டி கடற்கரை அருகே நான்கு படகுகள் கவிழ்ந்ததில் இரண்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்.. மேலும் 186 பேர் காணாமல் போயினர்.
கடந்தாண்டு மட்டும் சுமார் 60,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஏமன் வந்தடைந்தனர். இது 2023ல் வந்த 97,200ஐ விடக் குறைவு. கடற்பகுதியில் ரோந்து அதிகரித்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், ரோந்தை தாண்டியும் படகுகள் வரவே செய்கின்றன. அவை பல நேரங்களில் இதுபோன்ற விபத்துகளில் சிக்குவதும் கூட தொடர்கதையாகவே உள்ளன.
-
போரின் பயத்தை வென்ற மனிதநேயம்.. பஹ்ரைனில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்ட 'அன்னை தமிழ் மன்றம்' -
முடங்கிய துபாய்.. பிளான் Bஐ கையில் எடுக்கும் இந்திய விமான நிறுவனங்கள்.. நிலைமையை சமாளிக்க முடியுமா? -
போருக்கு நடுவிலும் கொட்டுது லாபம்! "அந்த" 90 கப்பல்கள்.. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஆடிய கேம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications