சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 68 இந்தியர்கள் கைது
வாஷிங்டன்: சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 68 இந்தியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 68 இந்தியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் அருகே இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று குடிபெயர்வோர் மற்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷனின் தலைவர் சத்நாம் சிங் சாஹல் கூறுகையில்,
68 பேரில் பாதிப் பேர் கடந்த ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதா அல்லது தங்க அனுமதிப்பதா என்பதை முடிவு செய்ய பல மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. பல மாதங்கள் காத்திருப்பது பலரையும் விரக்தி அடையச் செய்யும் என்றார்.
கைது செய்யப்பட்டவர்கள் டகோமாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று குடிபெயர்வோர் மற்றும் சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் வெர்ஜினியா கைஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications