ரஷ்யாவில் 7.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
மாஸ்கோ: கிழக்கு ரஷ்யாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவானது.
ரஷ்யாவின் வடகிழக்கு நகரான யேலிஸோவா பகுதியில் பூமிக்கடியில் 95 மைல் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடல் அருகே நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியையொட்டி அமைந்துள்ள கிழக்கு ரஷ்யாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 3.25 மணியளவில் எலிஸோவோ நலரில் இருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 160 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் ஏழாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதுமில்லை என தெரியவந்துள்ளது.