சீனாவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாக பதிவு.. கட்டிடங்கள் சேதம்!
பீஜிங்: சீனாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாக பதிவானது.
சீனாவின் வடமேற்கில் உள்ள கிங்காய் மாகாணத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சைனிங்கிலிருந்து தென்மேற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் கிங்காய் மாகாணத்தை மையமாக வைத்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்ககம் ஏற்பட்டது. சீனாவின் தென் மேற்கு பகுதியில் வேறு ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கங்களால் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் கூறினார்கள். நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தன்ர். சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், சில கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிகிறது.
சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மீட்பு பணிகள் நடந்து வருவதாவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications