உக்ரைன் கொடுத்த பதிலடி.. 800 ரஷ்ய ராணுவ வீரர்கள் பலி.. 30 பீரங்கிகள் தகர்ப்பு
கீவ்: முதல்நாள் போரில் ரஷ்யாவின் 800 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று போர் தொடுக்க துவங்கியது. குண்டுமழை பொழிந்ததில் ஏராளமானவர்கள் இறந்தனர். இன்று 2வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்துகிறது. தரைவழி, வான் வழி, கடல்வழி என தொடர்ச்சியாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

Recommended Video
இந்நிலையில் தான் முதல் நாள் நடந்த போர் குறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், ‛‛உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையை துவங்கியது முதல் தற்போது வரை 800 ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளனர். 30 டேங்குகள், 130 ஆயுத வாகனங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. 7 ரஷ்ய ராணுவ விமானங்கள், 6 ஹெலி லிகாப்டர்கள் வீழ்த்தப்பட்டுள்ளன'' என கூறியுள்ளது. இந்த தகவலை துணை ராணுவ அமைச்சர் ஹன்னா மல்யார் கூறியதாக அந்தநாட்டின் ராணுவத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications