சிறையில் வாடிய 87 இந்தியர்களை திரும்ப ஒப்படைத்தது பாகிஸ்தான்
டெல்லி: பாகிஸ்தான் சிறைகளி்ல் இருந்த 87 இந்தியர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் அந்நாட்டு ராணுவம் ஒப்படைத்தது.
சர்வதேச விதிகளை மீறி, பாகிஸ்தான் கடல்பரப்பில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக, 87 இந்தியர்களை, அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள். இவ்வாறு கைது செய்யப்படும் இந்தியர்கள் அவ்வப்போது நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், பாகிஸ்தானில் உள்ள லாந்தி சிறையில் வாடிய இந்தியர்கள் 87 பேரை பாகிஸ்தான் நேற்று விடுவித்தது. இவர்களது ஆவணங்களை சரிபார்த்த பின்னர் இன்று வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தானின் எல்லைப்பாதுகாப்பு படையினர் 87 பேரையும் ஒப்படைத்தனர். பாகிஸ்தான் சிறைகளில் இன்னும் 457 இந்தியர்கள் உள்ளதாகவும், அவர்களில் 86 பேர் அடுத்தபடியாக, விடுதலை செய்யப்படலாம் என பாகிஸ்தான் அகிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications