இந்திய தாக்குதலில் கொல்லப்பட்டாரா மசூத் அசார்?
ஜெய்ஷ் இ முகமது தலைவர் தீவிரவாதி மசூத் அசார் இந்திய விமானப்படை தாக்குதலில் சிக்கினார் என்று செய்திகள் வருகிறது.
Recommended Video

இஸ்லாமபாத்: ஜெய்ஷ் இ முகமது தலைவர் தீவிரவாதி மசூத் அசார் இந்திய விமானப்படை தாக்குதலில் பலியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் இருந்தோ, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தரப்பில் இருந்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. கடந்த வாரம் இந்த தாக்குதல் நிகழ்ந்தது.
இதில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் 4 முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான 12 மிராஜ் 2000 விமானங்கள் பாகிஸ்தான் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்த தாக்குலில் யாரும் இறக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறியது.

பல கேள்விகள்
ஆனால் அதே சமயம் ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்று ஜெய்ஷ் முகமது அமைப்பின் முக்கியமான தலைவரும், தலைவர் மசூத் ஆசாரின் தம்பியுமான மவுலானா அமர் ஒப்புக்கொண்ட வீடியோ ஒன்றும் வெளியானது. அப்பகுதியை சேர்ந்த மக்களும் இதில் இறந்தவர்களின் உடலை பார்த்ததாக கூறி இருந்தனர்.

தாக்கியது
புதிதாக, தற்போது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்தார் என்று செய்திகள் வருகிறது. பாலகோட் முகாமில் இருந்த அவர் விமான தாக்குதலில் மோசமாக காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பலியா?
அதேபோல் அவரின் முகாம் மீது இந்தியா குண்டு வீசியதில் மசூத் இறந்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. அதே சமயம் 50 வயதான மசூத் அசார் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்ததாக பாகிஸ்தானிலிருந்து சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. இது தொடர்பாக மாறி மாறி இப்படி மூன்று விதமான செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை இல்லாது
ஆனால் மசூத் அசார் நிலை குறித்து அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளிவரவில்லை. கடந்த வாரம் பாகிஸ்தான் அமைச்சர்கள், அதிகாரிகள் சிலர் மசூத் அசார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications