பாகிஸ்தானில் சிறுபான்மையின சிறுமி கடத்திக்கொலை... அரசுக்கு, மனித உரிமை ஆணையம் பிரஷர்!
லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சிறுபான்மை சிறுமி கடத்தி கொல்லப்பட்டாள்.
இறந்த சிறுமிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.
பாகிஸ்தானில் சிறுமிகள் கடத்தல் தொடர்பாக ஒரு நாளைக்கு 8 முதல் 10 வழக்குகள் பதிவாவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமி கடத்தல்
பாகிஸ்தானின் பைசலாபாத்தின் லியாகத் டவுனில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே இஷால் அப்சல் என்ற சிறுமி ஜனவரி 6-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இஷால் அப்சலை கடத்தி சென்றனர்.

உடலை மீட்டனர்
இது குறித்து பைசலாபாத்தின் ஜரன்வாலா சாலையில் உள்ள சதார் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். சம்பவம் நடந்த மறுநாள் அப்பகுதியில் உள்ள குளம் அருகே இஷாலின் உடலை போலீசார் மீட்டனர.

விசாரணை
இது குறித்து இஷாலின் தந்தை அப்சல் மாசிஹ் பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பு அலுவலகத்துக்கு சென்று விவரங்களை தெரிவித்தனர். மேலும் பைசலாபாத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தையும் நாடினார்.மனித உரிமை அமைப்பு குழுக்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பாலியல் பலாத்கார முயற்சிகளுக்குப் பிறகு ஐந்து மணி நேரத்திற்கு முன்னர் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டார் என்று ஆரம்ப மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இது தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்தனர். பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்கதையாக உள்ளது
பாகிஸ்தானில் இந்து, கிறிஸ்தவ மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. சிறுமிகள் கடத்தல் தொடர்பாக ஒரு நாளைக்கு 8 முதல் 10 வழக்குகள் பதிவாவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அளித்து, இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளன.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications