இறந்த குழந்தையின் உடலை 5 வருடமாக உண்டியலில் வைத்து பாதுகாத்த பெண்.. பரபரப்பு காரணம்!
ஜப்பானை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை 5 வருடமாக உண்டியலில் வைத்து பாதுகாத்து இருக்கிறார்.
டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை 5 வருடமாக உண்டியலில் வைத்து பாதுகாத்து இருக்கிறார்.
இவரின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இவர் டோக்கியோ அருகே உள்ள யோட்சியா என்ற பகுதியில் வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
இவர் தன்னுடைய இறந்த குழந்தையின் உடலை உண்டியலில் பலகாலமாக பாதுகாப்பாக வைத்துள்ளார். இதற்கு வித்தியாசமான விளக்கமும் அளித்துள்ளார்.

இறந்து பிறந்த குழந்தை
அவருக்கு ஐந்து வருடங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அவர் கணவன் இல்லாத காரணத்தால் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனால் பிறந்த குழந்தை இரண்டு மணி நேரத்தில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

என்ன செய்தார் தெரியுமா
இந்த நிலையில் அந்த குழந்தை இறந்த காரணத்தால் அந்த பெண் வசித்திருந்த வீட்டில் இருந்து அவரை காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக அந்த இறந்த குழந்தையை உண்டியல் ஒன்றில் வைத்து வீடு மாறி இருக்கிறார் அந்த பெண். பின் அந்த உண்டியலுடன் வாழவும் பழகியுள்ளார்.

5 வருடம் சுற்றி இருக்கிறார்
மொத்தமாக ஐந்து வருடம் இப்படி அந்த பெண் உண்டியலில் குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்ந்து இருக்கிறார். இதில் 4 முறை இவர் வீடு மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எல்லா இடங்களுக்கு மாறும்போது இந்த உண்டியலையும் எடுத்து சென்றுள்ளார்.

என்ன காரணம்
இந்த குழந்தை இருக்கும் உண்டியல்தான் தனக்கு அதிர்ஷ்டம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தனக்கு இருப்பது எல்லாம் அந்த குழந்தை மட்டுமே, அதையும் இழக்க விரும்பவில்லை. இந்த குழந்தையை புதைத்துவிட்டால், எனக்கு மீண்டும் குழந்தை பிறக்காது என்று அச்சமாக இருந்தது என்றுள்ளார். தற்போது இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications