அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை... போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சங்கீர்த். அவர் அமெரிக்காவில் எம்எஸ் படித்து வந்தார். ஆஸ்டின் பகுதியில் சங்கீர்த் அவரது அறையில் இருந்த சக நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீர்த் நேற்று நள்ளிரவில் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு தெலுங்கு மாணவர் சாய் சந்திப் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கன்சல்டன்சி ஒன்றின் மூலமாக சாய் சந்திப், சங்கீர்த் அறைக்கு சென்றுள்ளார். அந்த அறையில் ஏற்கெனவே இரண்டு மாணவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சங்கீர்த் கொலை சம்பவம் குறித்து சாய் சந்திப்பிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications