துபாயில் வங்கிக் கடனால் 4 குழந்தைகளுடன் வாடும் தமிழக தம்பதி: கொஞ்சம் உதவுங்களேன்
துபாய்: துபாயில் சிறிய வர்த்தக நிறுவனம் துவங்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் வந்தார் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கவிதாவும் வேலைக்காக துபாய் வந்தார்.
இருவரும் நல்ல முறையில் வாழ்க்கையை துவங்கினர். வர்த்தக நிறுவனம் துவங்க கவிதாவின் பெயரில் கடன் வாங்கினார் கார்த்திக். காலப்போக்கில் வணிக நிறுவனத்தை சரி வர நடத்த முடியாததால் கடனை கட்ட முடியவில்லை. இதற்கிடையே இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது இருவரும் வேலையின்றி இருந்து வருகின்றனர். இதனால் தங்குவதற்கும், உணவிற்கும் நண்பர்களின் உதவியையே நாடி வருகின்றனர். சட்ட சிக்கலால் இங்கிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் தமிழர்களின் உதவியை எதிர்பார்த்து உள்ளனர். அவர்களுக்கு உதவிட விருப்பம் உள்ளவர்கள் 055 8867196 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு உதவிடலாம்.












Click it and Unblock the Notifications