அமெரிக்காவில் உளவு செயற்கைக்கோளுடன் விண்ணில் பறந்த ராக்கெட் வெடித்து சிதறியது
வாஷிங்டன்: உளவு செயற்கைகோளுடன் அமெரிக்காவால் அனுப்பப்பட்ட விண்வெளி ராக்கெட் ஏவிய சில விநாடிகளிலேயே வெடித்துச் சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க புலனாய்வு துறையான என்.ஆர்.ஓ சார்பாக உளவு செயற்கைகோள் ஒன்று அனுப்ப திட்ட்டமிடப்பட்டது. அதன்படி, அந்நாட்டின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கெனவரல் என்ற இடத்தில் இருந்து டெல்டா 4 என்ற உளவு ராக்கெட் மூலமாக செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.

இது வரை அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளிலேயே இது மிகவும் பெரியதாக கருதப்படுகிறது. மொத்தம் மூன்று அடுக்குகள் கொண்டது இந்த ராக்கெட். ஆனால், ராக்கெட் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விண்ணில் வெடித்துச் சிதறி கடலில் விழுந்தது. அப்போது அமெரிக்க நேரப்படி இரவு 1.51 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா விசாரணை மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்காவில் நேற்று நைட் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்த நிலையில், பெரிதும் எதிர்பார்த்த ராக்கெட்டும் வீழ்ந்துள்ளது அந்த நாட்டு அரசுக்கு அடுத்தடுத்த தோல்வியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications