இலங்கையில் சம்பவம் செய்த அதானி குழுமம்! ஓராண்டில் நடந்த பிரமாண்ட சாதனை!
கொழும்பு: இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் அதானி குழுமத்தின், 'கொழும்பு மேற்கு சர்வதேச முனையகம்' ஓராண்டிற்குள்ளேயே 10 லட்சம் TEU கன்டெய்னர்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
'கொழும்பு மேற்கு சர்வதேச முனையகம்' ₹6,700 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இதில் அதானி போர்ட்ஸ் (APSEZ), இலங்கையின் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக ஆணையம் ஆகியவை கூட்டாக இணைந்துள்ளன. அதாவது இவர்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இது இலங்கையில் அதானி குழுமம் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்பாட்டிற்கு வந்த இந்த முனையம், வெறும் ஓராண்டிற்குள் 10 லட்சம் TEU-களைக் கையாண்டுள்ளது. கொழும்பு துறைமுக வரலாற்றிலேயே இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை எட்டிய முதல் முனையம் இதுதான். பொதுவாக ஒரு முனையம் இந்த நிலையை அடைய பல ஆண்டுகள் ஆகும், ஆனால் அதானியின் திறமையான மேலாண்மையால் இது சாத்தியமாகியுள்ளது.
இது கொழும்பு துறைமுகத்திலேயே, முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இயங்கும் முதல் ஆழ்கடல் முனையமாகும். 1,400 மீட்டர் நீளமுள்ள தளம் மற்றும் 20 மீட்டர் ஆழம் கொண்டது. இதனால் உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்களை இங்கு எளிதாக நிறுத்த முடியும். இதன் மொத்தத் திறன் ஆண்டுக்கு 32 லட்சம் TEU ஆகும்.
ஏன் இது முக்கியம்?
இந்தியாவுக்கான பலன்: கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளில் பெரும் பகுதி இந்திய வர்த்தகத்துடன் தொடர்புடையது. இந்த முனையத்தின் மூலம் இந்தியப் பொருட்கள் உலக நாடுகளுக்கு விரைவாகச் சென்றடையும்.
சர்வதேசப் போட்டி: கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளை இணைக்கும் முக்கிய கப்பல் பாதையில் இது அமைந்துள்ளதால், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மையமாக இது உருவெடுத்துள்ளது.
அதானியின் உலகளாவிய தடம்: இந்தியாவின் பல துறைமுகங்களை இயக்கும் அதானி குழுமம், இந்தத் திட்டத்தின் மூலம் சர்வதேச அளவிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications