இலங்கையில் சம்பவம் செய்த அதானி குழுமம்! ஓராண்டில் நடந்த பிரமாண்ட சாதனை!
கொழும்பு: இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் அதானி குழுமத்தின், 'கொழும்பு மேற்கு சர்வதேச முனையகம்' ஓராண்டிற்குள்ளேயே 10 லட்சம் TEU கன்டெய்னர்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
'கொழும்பு மேற்கு சர்வதேச முனையகம்' ₹6,700 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இதில் அதானி போர்ட்ஸ் (APSEZ), இலங்கையின் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக ஆணையம் ஆகியவை கூட்டாக இணைந்துள்ளன. அதாவது இவர்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இது இலங்கையில் அதானி குழுமம் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்பாட்டிற்கு வந்த இந்த முனையம், வெறும் ஓராண்டிற்குள் 10 லட்சம் TEU-களைக் கையாண்டுள்ளது. கொழும்பு துறைமுக வரலாற்றிலேயே இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை எட்டிய முதல் முனையம் இதுதான். பொதுவாக ஒரு முனையம் இந்த நிலையை அடைய பல ஆண்டுகள் ஆகும், ஆனால் அதானியின் திறமையான மேலாண்மையால் இது சாத்தியமாகியுள்ளது.
இது கொழும்பு துறைமுகத்திலேயே, முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இயங்கும் முதல் ஆழ்கடல் முனையமாகும். 1,400 மீட்டர் நீளமுள்ள தளம் மற்றும் 20 மீட்டர் ஆழம் கொண்டது. இதனால் உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்களை இங்கு எளிதாக நிறுத்த முடியும். இதன் மொத்தத் திறன் ஆண்டுக்கு 32 லட்சம் TEU ஆகும்.
ஏன் இது முக்கியம்?
இந்தியாவுக்கான பலன்: கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளில் பெரும் பகுதி இந்திய வர்த்தகத்துடன் தொடர்புடையது. இந்த முனையத்தின் மூலம் இந்தியப் பொருட்கள் உலக நாடுகளுக்கு விரைவாகச் சென்றடையும்.
சர்வதேசப் போட்டி: கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளை இணைக்கும் முக்கிய கப்பல் பாதையில் இது அமைந்துள்ளதால், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மையமாக இது உருவெடுத்துள்ளது.
அதானியின் உலகளாவிய தடம்: இந்தியாவின் பல துறைமுகங்களை இயக்கும் அதானி குழுமம், இந்தத் திட்டத்தின் மூலம் சர்வதேச அளவிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications