சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா... ஒருவர் பலி, ஒரு நாளில் 52 பேருக்கு பாதிப்பு
சியோல்: சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் நாடாக தென்கொரியா மாறி வருகிறது. அந்த நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் முதல் பலி ஏற்பட்டுள்ளது.
கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. எனினும் இந்த வைரஸ் எப்படி பரவுகிறது, இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை அரசு அறியும் முனபே அதாவது ஜனவரி 10ம் தேதிக்கு முன்பே பலருக்கும் மூச்சு காற்று மூலம் பரவியது.
அதன்பிறகு சீன அரசு வுகான் நகரை மூடத்தொடங்கிய போதிலும் ஜனவரி 23ம் தேதிக்கு பாதிப்பு விஸ்வரூபம் எடுத்தது. தினமும் 2000 பேருக்கு பாதிப்பு ஏற்பட ஆரம்பித்த நிலையில், இரட்டை படையில் தொடங்கிய உயிரிழப்பு 100 இலக்கமாக மாற ஆரம்பித்தது. வுஹான் நகரத்திலிருந்து சீனாவின் மற்ற நகரங்களுக்கும் பிறகு அங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவ

75465 ஆக அதிகரிப்பு
இன்றைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சீனாவில் 118 பேர் கொரோனாவினால் உயிரிழந்தார்கள். புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்ட 889 பேரையும் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,465ஆக உயர்ந்துள்ளது.

வெகுவாக குறைவு
அதே சமயத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,109 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். சீனாவில் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

பாதிப்பு அதிகம்
ஆனால் சீனாவின் அண்டை நாடானான தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டேகு மற்றும் சியோங்டோ ஆகிய இரண்டு நகரங்களிலும கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை சிறப்பு பராமரிப்பு மண்டலமாக அறிவித்து போர்கால நடவடிக்கைகளை தென்கொரியா எடுத்து வருகிறது.

156 ஆக உயர்வு
இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் தென்கொரியாவில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளார்கள். இதன் மூலம், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தென்கொரியாவில 156ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் தென் கொரியாவில் ஒருவர் உயிரிழந்திருப்பதையும் அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

61 வயது பெண்
ஷின்ச்சியான்ஜி சர்ச் ஆஃப் ஜீசஸ் குழுவை சேர்ந்த 61 வயதாகும் பெண் ஒருவருக்கு உண்டான கொரோனா தொற்றே தென்கொரியாவின் டேகு நகரில் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட காரணம் என நம்பப்படுகிறது. அவருடை குழுவைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் தேடி கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க தென்கொரியா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications