மாம்பழங்களைத் தொடர்ந்து வெற்றிலை இறக்குமதிக்கும் ஆப்பு – ஐரோப்பிய யூனியன் உத்தரவு
லண்டன்: ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே மாம்பழ இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. தற்போது வெற்றிலை இறக்குமதிக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உழைப்பாளர் தினமான மே முதல் தேதியில் இருந்து அல்போன்சா வகை மாம்பழங்களுக்கு இறக்குமதி தடை விதித்திருந்தது ஐரோப்பா யூனியன்.தற்போது புதியதாக இந்திய வெற்றிலை இறக்குமதியையும் தடை செய்துள்ளது.
இந்தத் தடை குறித்து ஐரோப்பிய யூனியன், ''இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் "சால்மொலினா" என்ற ரசாயனப் பொருள் அதிக அளவில் இருக்கிறது.
இந்த ரசாயனம் மனிதர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். எனவே, இந்த வெற்றிலைகளை இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்படுகிறது'' என்று கூறியுள்ளது.
மேலும் மற்ற நாடுகளான வங்காளம், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலின் வெற்றிலைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.