2வது முறையாக குலுங்கிய பூமி! ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. தொடரும் அதிர்வால் பீதியில் மக்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து குலுங்கும் பூமியால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் அதாவது காலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியாவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏறு்பட்டன. இதில் பல ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இது மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். உள்நாட்டு போரில் இருந்து மீண்டு தாலிபான்களிடம் சிக்கியுள்ள ஆப்கன் மக்களுக்கு நிலநடுக்கமும் அவ்வப்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் இன்று காலையில் 11.19 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 220 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலை கொண்டிருந்தால் சேதம், உயிர் பலி ஏற்படவில்லை. இருப்பினும் இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 என்ற அளவில் பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தான் இன்று மாலையில் 6.26 மணிக்கு ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனையும் தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக சேதம், உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் கூட இன்று மட்டும் ஒரே நாளில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக இன்று காலை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் சில இடங்களிலும் உணரப்பட்டது. டெல்லி, பஞ்சாப், ஹிரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம், காலை 11.23 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications