இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய 400 ஏவுகணைகள்.. அமெரிக்கா ‛வார்னிங்’கை மீறி தாக்குதல்.. வருகிறதா உலகப்போர்?
ஜெருசலேம்: காசா மீதான போர் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரானில் இருந்து 400 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்னர். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இந்த ‛அட்டாக்' நடந்தால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என இன்று அமெரிக்கா எச்சரித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் அண்டை நாடுகளாக உள்ளன. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இயங்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறி உள்ளது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இதனை ஈரான் கடுமையாக எதிர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி ஈரான் என்பது இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்படும் தனது ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மூலம் ஈரான், இஸ்ரேலை தாக்கி வருகிறது.
இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. ஹிஸ்புல்லாவின் படை தளபதிகளை ஒவ்வொருவராக இஸ்ரேல் தீர்த்து கட்டியது. கடைசியாக ஹிஸ்புல்லாவின் தலைமை தளபதி நஸ்ருல்லாவையும் ஏவுகணை தாக்குதல் மூலம் 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தீர்த்து கட்டியது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று காலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை செய்தது. அதில், ‛‛அடுத்த 12 மணிநேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தும். இதற்கு முழுவீச்சில் ஈரான் தயாராகி வருகிறது. ஈரான் இந்த தாக்குதலை நடத்தும் பட்சத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை பாதுகாக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபடும். இதனால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும்'' என எச்சரிக்கை செய்தது.
அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து இஸ்ரேல் அலர்ட்டானது. ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் அமெரிக்கா எச்சரித்தது போலவே திடீரென்று ஈரான் 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதலை தொடர்ந்துள்ளது. மொத்தம் 400 ஏவுகணை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியதாக கூறப்படுகிறது.
ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேலில் உள்ள சைரன்கள் அலறின. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஈரானின் இந்த தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. இருப்பினும் சேத விபரங்கள் பற்றிய எந்த தகவலையும் இஸ்ரேல் வெளியிடவில்லை. ஆனாலும் கூட ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் தனது ‛அயன்டோம்’ மூலம் வானிலேயே இடைமறித்து செயலிழக்க செய்தோடு, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு திசைதிருப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் மீதான ஈரானின் நேரடி தாக்குதலால் பல்வேறு நாடுகளும் அங்குள்ள நிலையை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளன. குறிப்பாக இஸ்ரேலில் உள்ள தங்களின் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீடு மற்றும் பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பல நாடுகள் இஸ்ரேலில் உள்ள தங்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளன.
காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கி ஓராண்டு கடக்க உள்ளது. அதேபோல் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் - இஸ்ரேலுக்கும் தொடர்ந்து மோதல் என்பது வலுத்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் ஈரான் முதல் முறையாக தற்போது இஸ்ரேல் மீது நேரடியாக ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதோடு 3ம் உலகப்போர் மூளுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு!











Click it and Unblock the Notifications