Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழிக்குப் பழி... நெதன்யாகு கதையை முடித்ததா ஈரான்? உலக அளவில் பரபரப்பை கிளப்பிய 2 போட்டோ! பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அவர் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவில் கையில் ஆறு விரல்கள் இருப்பது போல தோன்றியதால், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே நெதன்யாகு தாக்குதலுக்குள்ளதாகவும் ஒரு போட்டோ பரவி வருகிறது.

இஸ்ரேல் -அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த போர் தற்போது 15-வது நாளை எட்டியுள்ளது. இந்த சூழலில் கடந்த மார்ச் 13ஆம் தேதி நெதன்யாகு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில் அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் பேசியிருந்தார். ஆனால் அந்த வீடியோவை கவனமாக பார்த்த சில சமூக வலைதள பயனர்கள், அவர் கையை அசைக்கும் போது ஒரு கட்டத்தில் ஆறு விரல்கள் இருப்பது போல காட்சி தெரிகிறது என்று சுட்டிக்காட்டினர்.

benjamin netanyahu iran israel

ஈரான் இஸ்ரேல் போர்

இதன் காரணமாக அந்த வீடியோ ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் பரவத் தொடங்கியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து #WhereisBibi என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்ட் ஆனது. சிலர் நெதன்யாகு ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார் என்றும், தற்போது வெளியாகும் வீடியோக்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் அவரது இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.

நெதன்யாகு வீடியோ சர்ச்சை

இந்த வதந்திகளுக்கு சமூக வலைதள தளங்களில் பயன்படுத்தப்படும் ஏஐ கருவிகள் விளக்கம் அளித்துள்ளன. குறிப்பாக Grok AI வெளியிட்ட விளக்கத்தில், அந்த வீடியோவில் நெதன்யாகுவுக்கு ஐந்து விரல்களே உள்ளன என்றும், ஒளிப்பதிவு செய்யப்பட்ட கோணம் மற்றும் கையின் அசைவு காரணமாக உருவான மாயத் தோற்றமே அது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் மற்றொரு புகைப்படமும் வைரலாகியுள்ளது. அதில் நெதன்யாகுவைப் போன்ற முகம் கொண்ட ஒருவர் காயமடைந்த நிலையில் இடிபாடுகளுக்குள் கிடப்பது போன்ற காட்சி காணப்படுகிறது. அருகில் சில ராணுவ வீரர்கள் அவருக்கு உதவி செய்யும் காட்சியும் உள்ளது.

நெதன்யாகு காயம்

இந்த புகைப்படத்தை சிலர், சமீபத்திய தாக்குதலில் நெதன்யாகு காயமடைந்ததாகவும் அல்லது அவர் கொல்லப்பட்டதாகவும் கூறி பரப்பி வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படமும் செயற்கை நுண்ணறிவு அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நெதன்யாகு காயமடைந்ததாக உறுதி செய்யப்பட்ட எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தாலும், இஸ்ரேல் அரசு அல்லது அமெரிக்க அதிகாரிகள் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

இஸ்ரேல் - ஈரான்

மேலும் நெதன்யாகு தொடர்ந்து இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறார் என்றும், போர் நிலை குறித்து நாட்டின் மக்களிடம் உரையாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை தொடங்கின. அதன் பின்னர் இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த மோதலில் பல முக்கிய ராணுவ இலக்குகள் தாக்கப்பட்டதுடன், பொதுமக்களும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் நிலவும் இந்த பதற்றம் உலக அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+