வீறிட்டழுத 9 மாதக் குழந்தை.. தாய்மை பொங்க ஓடி வந்த ஏர் ஹோஸ்டஸ்.. உருக்கமான சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

மணிலா: விமானத்தில் தன் குழந்தைக்கு கொண்டு வந்த பால் தீர்ந்து விட்டதால் அழுத குழந்தையை வைத்து கொண்டு அல்லாடிய போது விமான பணிப்பெண் ஒருவர் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பின்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணாக பேட்ரீஷா ஆர்கானோ (24) இருந்தார். அப்போது அவர் அந்த விமானத்தில் குழந்தை அழும் சப்தத்தை கேட்டார்.

Air hostess breastfeeds strangers crying baby on board a flight

9 மாத குழந்தையின் தாயான ஆர்கானோவுக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் பதற்றம் ஏற்பட்டுவிட்டது. இதனால் உள்ளே சென்று பார்த்தார்.

[என் பெயர் மாரி.. நரேந்திர மாரி.. குழம்பி அதிர்ந்த கமலாலயம்!]

அப்போது அழுத குழந்தைக்கு கொண்டு வந்த பால் தீர்ந்து விட்டதால் குழந்தை அழுவதையும் என்ன செய்வதென்று தெரியாமல் தாய் தவிப்பதையும் கண்டார். இதையடுத்து அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்தார்.

ஆர்கானோ பால் கொடுத்தவுடன் குழந்தை நிம்மதியாக தூங்கியது. இதையடுத்து அந்த தாய் ஆர்கானோவுக்கு நன்றி தெரிவித்தார். ஒரு குழந்தைக்கு தம்மால் உதவ முடிந்ததை அடுத்து ஆர்கானோ மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளார். இவர் தாய்ப்பால் கொடுக்கும் படம் வைரலாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+