14 சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்ட நேபாள விமானம் மாயம்
Subscribe to Oneindia Tamil
காத்மாண்ட்: நேபாளத்தில் பதினான்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று திடீரென மாயமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேபாள ஏர்லைன்ஸை சேர்ந்த சிறிய ரக விமானம் ஒன்று பிரபல சுற்றுலா ரெசார்ட்டில் இருந்து பதினான்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று மதியம் 1.30 மணியளவில் பொகாரா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமானத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே இருந்த தொடர்பு தடைபட்டதாக தெரிவித்துள்ளனர் விமான நிலைய அதிகாரிகள். தற்போது விமானம் என்ன ஆனது, விபத்தா அல்லது விமானம் கடத்தப் பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில், அந்தமான் சுற்றுலா சென்றிருந்த 31 பேர் படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications