3 அல் ஜசீரா நிருபர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை
கெய்ரோ: தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பொய்யான செய்தியை பரப்பியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் 3 அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு எகிப்து கோர்ட் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. கனடா குடியுரிமை பெற்றவரான முகம்மது பாஹ்மி, ஆஸ்திரேலிய செய்தியாளர் பீட்டர் கிறிஸ்ட், எகிப்தைச் சேர்ந்த பஹர் முகம்மது ஆகியோருக்கே தற்போது தண்டனை தரப்பட்டுள்ளது.

அதேபோல அல் ஜசீராவுக்காக பணியாற்றி வரும் மேலும் 3 பேருக்கும் இதே அளவிலான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 செய்தியாளர்களும், முஸ்லீம் பிரதர்ஹுட் கட்சியுடன் இணைந்து, தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ஆனால் தாங்கள் அப்பாவிகள் என மூன்று பேரும் வாதிட்டிருந்தனர்.
தாங்கள் செய்தியாளராக மட்டுமே செயல்பட்டதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். ஆனால் இந்த மூன்று பேரும் உரிய பிரஸ் உரிமம் இல்லாமல் வேலை பார்த்ததாக எகிப்து அரசு குற்றம் சாட்டியது. வழக்கு விசாரணையின் இறுதியில் இவர்களுக்குத் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து மறு விசாரணை கோரி மூன்று பேரும் மனு செய்தனர். இதை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த கோர்ட் தண்டனையை நிறுத்தி வைத்து 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தது. அதன் பின்னர் மறு விசாரணை தொடங்கியது.
இந்த விசாரணையின் இறுதியில் தற்போது தண்டனையைக் குறைத்து 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு உலக அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது முட்டாள்தனமான தீர்ப்பு என்று அல் ஜசீராவும் வர்ணித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications